அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும்
பொதுவாக எல்லா காலங்களிலும் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய வெண்டைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.
வெண்டைக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன, மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. மலச்சிக்கல் மற்றும் உடல் எடை இழப்புக்கும் வெண்டைக்காய் துணைப்புரிகின்றது.
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வெண்டைக்காய் கொண்டிருந்தாலும், இதன் வழவழப்பு தன்மை காரணமாக பெரும்பாலானவர்கள் இதனை தவிர்த்துவிடுகின்றார்கள்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயில் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையான சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை வேர்க்கடலை - 1/2 கப்
எண்ணெய் - 1 1/2 தே.கரண்டி
வெண்டைக்காய் - 200 கிராம் (சற்று நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 2
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 மேசைக்கரண்டி
புளி - பெரிய எலுமிச்சை அளவு (1 1/2 கப் நீரில் ஊற வைத்தது)
சாம்பார் தூள் - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
தாளிப்பு வடகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
வெல்லம் - 1 1/2 தே.கரண்டி
கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி
நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து பச்சை வேர்க்கடலையை போட்டு, அதில் 1 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் பெரிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து, 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெண்டைக்காய் சேர்த்து நன்றாக சுருங்கும் வரையில் வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து விட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, சாம்பார் தூள் மற்றும் 1 கப் நீரை கூடுதலாக சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகம் மற்றும் கறிவேப்பிலை அகியவற்றை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து, அதில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வேக வைத்துள்ள வேர்க்கடலையை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
அதன் பின்பு அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா நீரை ஊற்றி கிளறி, வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
அதனையடுத்து, அதில் கெட்டியான தேங்காய் பாலையும் சேர்த்து கிளறிவிட்டு, மிதமான தீயில் வைத்து, 15-20 நிமிடங்கள் வரையில் நன்றாக சுண்ட கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியில், அதில் மிளகுத் தூள் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான வெண்டைக்காய் கார குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
