தாபா பாணியில் நாவூரும் சுவையில் முட்டை பட்டாணி மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்
பொதுவாக அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய, குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களின் பட்டியலில் முட்டைக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் முட்டை, உடலுக்குத் தேவையான உயர்தர புரதச்சத்தை வழங்கும் சிறந்த உணவாக விளங்குகிறது.

முட்டையில் உள்ள புரதம் உடல் தசைகளின் வளர்ச்சிக்கும், செல்களின் சீரமைப்புக்கும் உதவுவதுடன், உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கும் ஆதரவாக அமைகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் வலிமை, கூந்தல் வளர்ச்சி, இதய ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவை பாதுகாக்க உதவுகின்றன.

அந்தவகையில், அன்றாட உணவில் இடம்பெறும் முட்டையை சற்று வித்தியாசமான முறையில், சுவை நிறைந்த தாபா பாணியில் மசாலா சுவையும் பட்டாணியின் தனித்துவமான சுவையும் இணைந்த முட்டை பட்டாணி மசாலாவை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டையை வறுக்க தேவையானவை
6 வேகவைத்த முட்டைகள்
1 ஸ்பூன் எண்ணெய்
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
½ ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்

மசாலா தயாரிக்க தேவையானவை
2 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் எண்ணெய்
1 கப் நறுக்கிய வெங்காயம்
1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
2 நறுக்கிய பச்சை மிளகாய்
1 கப் அரைத்த புதிய தக்காளி விழுது
2 ஸ்பூன் மல்லித் தூள்
½ ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
½ ஸ்பூன் சீரகத் தூள்
தேவையான அளவு உப்பு
1 ஸ்பூன் கடலை மாவு
½ கப் வேகவைத்த பச்சை பட்டாணி
1 ஸ்பூன் கசூரி மேத்தி
½ ஸ்பூன் கரம் மசாலா
தூள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை
முதலில் முட்டைகளை வேகவைத்து, தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். முட்டையின் மேல் கத்தியால் லேசாக சிறிய கீறல்கள் போடவும். இதனால் மசாலாவின் சுவை முட்டைக்குள் நன்றாக ஊறும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்த எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கி, அதில் மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் முட்டைகளைச் சேர்த்து, எல்லா பக்கங்களிலும் லேசாக பழுப்பு நிறமாகும் வரை நன்றாக வறுக்கவும். வறுத்த முட்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைக்த்துக்கொள்ள வேண்டும்.அதே பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி நன்றாக சமைந்து எண்ணெய் பிரியும் வரை வதக்க
பிறகு மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும், வேகவைத்த பச்சை பட்டாணி, வறுத்த முட்டைகள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து, பட்டாணி மென்மையாகும் வரை வேகவிட்டு, இடையிடையே கிளறி விடவும்.
இறுதியாக கசூரி மேத்தி, கரம் மசாலா தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் அவ்வளவு தான், அசத்தல் சுவையில், பட்டாணி முட்டை மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |