உணவு விடயத்தில் மருத்துவரையே கலாய்த்த நபர்... நெத்தியடி பதில் கொடுத்த தொகுப்பாளர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா நிகழ்ச்சியில், இந்த வாரம், கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் VS கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள் எனும் தலைப்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
இதில் கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் தரப்பில் பங்கேற்ற நபரொருவர், கட்டுப்பாட்டுடன் தான் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலுவுறுத்திய எதிர்தரப்பு மருத்துவரான பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.
அந்தவயைில், இந்த வாரம், கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் VS கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள் எனும் தலைப்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
இதில் பங்கேற்ற இரு தரப்புக்கு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக ஏற்பட்ட விவாத காட்சி இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |