18 வயதில் 10 மொழி தெரியும்! கொரியா இளைஞனுடன் காதல்.. அரங்கத்தை அதிரவிட்ட பெண்
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் Vs பயத்தில் பெற்றோர்கள் எனும் தலைபில் சுவாரஸ்யமான மற்றும் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
அதில் கலந்துக்கொண்ட் 18 வயது இளம் பெண் ஒருவருர் இந்த வயதிலேயே 10 மொழிகளுக்கு மேல் பேசுவதாகவும், கொரியாவை சேர்ந்த இளைஞனை காதலிப்பதாகவும், வேறு நாடுகளுக்கு ஜோடியாக டூர் சென்றுள்ளதாகவும் தனது அம்மாவின் முன்னிலையில் தைரியமாக பேசிய காட்சிகள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவான ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் Vs பயத்தில் பெற்றோர்கள் எனும் தலைபில் சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றுள்ளது. அதன் சில காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |