Tamizha Tamizha: கத்தியால் உயிரை மாய்க்க முயன்ற நபர்..சோகத்தில் மூழ்கிய அரங்கம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2026 என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் தற்கொலைக்கு முயன்றவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இந்த தலைப்பில் விவாதித்த போது ஒருவர் தான் கடனாளியாக இருந்த போது யாரும் அவருக்கு துனை இல்லாததால் கத்தியை எடுத்து தன் வயிற்றில் குத்தி கொண்டார் என்று கூறியுள்ளார்.
மற்றும் ஒருவர் தனது குடும்பத்தினர் தன்னை கைவிட்டதால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார்.
மறுபக்கம் அதிலிருந்து மீண்டவர்களில் ஒரு பெண் தனது குழந்தைகள் பசியால் அழுகிறதை கண்டு தன் மகளிடம் நாம் சாமியிடம் போனால் நமக்கு நிம்மதி இருக்கும் என்று கூறியுள்ளார் ஆனால் அவரது மகளோ நாம் தம்பியை மட்டும் உறவினரின் வீட்டில் விடுவோம் என்று கூறியுள்ளார்
இதினால் அவர் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும் தனது மகள் கூறியதை கேட்டதினால் அவர் இப்பொழுது தனது பிள்ளைகளை நன்றாக வளர்த்துள்ளதாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |