போட்டியாளர்களின் ஒயாத சண்டை: சஞ்சீவ் கூறிய ஒற்றை வார்த்தை! ஷாக்கில் பிக்பாஸ் வீடு
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்கினால் அடுத்தடுத்து சண்டைகள் அரங்கேறி வருகின்றது.
இதில் தாமரையை பிரியங்கா விடாமல் துரத்திக்கொண்டுள்ளது தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் வெளியாகியுள்ளது.
இன்றைய ப்ரொமோவில் தாமரையிடம் பிரியங்கா கேள்வி கேட்க இதற்கு இடையே இருந்த சிபி எதோ கூறுகின்றார். இறுதியில் சண்டையாகி சிபி கோபத்தில் கையில் வைத்திருக்கும் பேப்பரை கிழித்து எரிந்துவிட்டு சென்றுள்ளார்.
பழைய போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்க திடீரென Silent என்று யாரோ பயங்கர சத்தத்துடன் கத்துகின்றார். குறிப்பாக இந்த குரல் சஞ்சீவ் குரல் போன்று தான் இருக்கின்றது.
இதுவரை பொறுமையாக இருந்த சஞ்சீவ் தற்போது தனது விளையாட்டு ஆரம்பித்துவிட்டாரா? என்ற கேள்வி இந்த ப்ரொமோவினால் எழுந்துள்ளது.