2 மாத கர்ப்பிணி - நொடிப்பொழுதில் வெடித்த விமானம்... சௌந்தர்யாவின் சோக கதை
நடிகை சௌந்தர்யா இரண்டு மாத குழந்தை வயிற்றில் இருக்கும் போதே இறந்துள்ளார். வாழ்க்கையில் துயரம் இப்படியும் வருமா என சௌந்தர்யாவின் கதை உள்ளது.

நடிகை சௌந்தர்யா
நம் கண் முன்னே வாழ்ந்துகொண்டிருப்போர்கள் திடீரென இறந்தால் நம் மனம் ஏற்றுக்கொள்ளுமா? அதே போல தான் நடிகை சௌந்தர்யா. தென்னிந்திய சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்பட்ட ஒரு நடிகை தான் அவர்.
ஆனால் மக்கள் எவ்வளவு அவரை ரசித்தனரோ அதே அளவிற்கு காலம் அவரின் உயிரை பறித்துக்கொண்டது. கரியரின் உச்சத்தில் அவரது உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
31 வயதிலே உயிரை இழந்தார் நடிகை சௌந்தர்யா. இவருடைய உண்மையான பெயர் சௌமியா. கன்னட தயாரிப்பாளர் சத்யநாராயணாவின் மகள் தான் இவர்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி 1992-ல் கன்னடத்தில் வெளியான ‘பா நன்ன ப்ரீதிசு’ படத்தின் மூலம் நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் ‘பொன்னுமணி’ படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ என்ற பாடல் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.
இதன் பின்னர் பல படங்களில் நடித்தார் சௌந்தர்யா. அவர் நடித்த அத்தனை படமும் தற்போது கூட மக்கள் மனதில் அப்படியே இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் இவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். கிட்டதட்ட 12 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை சௌந்தர்யா.

துயரக்கதை
படங்களில் நடித்த சௌந்தர்யா அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி ஆந்திராவில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசாரத்துக்கு பெங்களூருவிலிருந்து தன்னுடைய சகோதரருடன் விமானத்தில் புறப்பட்டுள்ளார் சௌந்தர்யா.
அந்த விமானம் புறப்பட்ட நேரத்திலேயே வெடித்து சிதறியது. இந்த விபத்து நடந்த போது நடிகை சௌந்தர்யா 2 முதல் 3 மாதங்கள் வரை கர்ப்பமாக இருந்துள்ளார்.

இவரது கணவர் ரகு என்பவராகும். சௌந்தர்யா இறக்க முன்னர் சௌந்தர்யாவை தமிழில் அறிமுகம் செய்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் என்பவரிடம் தொலைபேசியில் பேசி உள்ளார்.
அதில் சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாகவும், 'ஆப்தமித்ரா' (சந்திரமுகி படத்தின் கன்னட வடிவம்) படத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி குடும்பத்தைக் கவனிக்கப் போவதாகவும்" மகிழ்ச்சியாக கூறி உள்ளார்.
நடிகை சௌந்தர்யாவின் இறப்பிற்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம் இருக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இன்றைய சமூதாயம் கூட நடிகை சௌந்தர்யாவை மறக்கவில்லை என்பதே உண்மை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |