மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் சூர்யா- வைரல் புகைப்படம்!
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா 2 வது அலையால் நாள்தோறும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400 கும் அதிகமானோர் அன்றாடம் உயிரிழந்தும் வந்தனர்.
இதையடுத்து, தற்போது தமிழகத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை விரைவில் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்திவருகிறது. மேலும், சினிமா பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வை வழங்கிவருவதோடு, தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ள நிலையில், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்....
#Vaccinated pic.twitter.com/3SJG9wYPFD
— Suriya Sivakumar (@Suriya_offl) June 22, 2021