பதறியடித்து ஓடிய அர்ஜுன்: சர்வைவர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம் என்ன?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் சிருஷ்டி கடந்த வாரம் எலிமினேட் ஆனார்.
குறித்த போட்டியாளர்கள் காடர்கள், வேடர்கள் என்று இரு அணிகளாக பிரிந்த நிலையில், இந்த வாரம் அதிகமாக வாயடித்து வந்த பார்வதி அவரது அணியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இந்திரஜா மற்றும் காயத்ரி ஏற்கனவே எலிமினேட் ஆகி மற்றொரு இடத்தில் இருக்கும் நிலையில், பார்வதியும் அங்கு செல்கின்றார்.
இந்திரஜா, காயத்ரி இருவருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு இதில் இந்திரஜா வெளியேறினார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
இதில் காடர்கள் அணியில் இரண்டு பேரும், வேடர்கள் அணியில் இரண்டு பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர்.
இந்த போட்டியில் ஏற்பட்ட அசம்பாவிதம் ஏற்பட்டது போன்றும் அர்ஜுன் பதற்றத்துடன் ஓடிச்சென்றதும் காட்டப்பட்டுள்ளது.