சர்வைவரில் குள்ளநரியாக செயல்பட்ட காயத்ரியின் பரிதாபநிலை: தலைவர் பதவிக்கு நடக்கும் போட்டி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியினை அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
எலிமினேட் ஆன இந்திரஜா மற்றும் சிருஷ்டி வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் மற்ற 14 போட்டியாளர்களை வைத்து பயங்கரமான டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் வேடர்கள் டீம் வெற்றி பெற்று வாழ் ஒன்றினை வாங்கிக்கொண்டதால், காடர்கள் டீம் ட்ரைபல் பஞ்சாயத்திற்கு காடர்கள் டீம் வரவழைக்கப்பட்டு வாக்கு அடிப்படையில் ஒருவரை வெளியேற்ற அர்ஜுன் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் டீமில் உள்ள நபர்கள் காயத்ரியை தெரிவு செய்துள்ளனர். ஆனாலும் அவருக்கு அர்ஜுன் ஒரு வாய்ப்ப கொடுத்தும், அது அவரைக் காப்பாற்ற முடியாமல் சென்றுள்ளது.
இதனால் நேற்றைய தினம் எபிசோட்டின் முடிவில் காயத்ரி வெளியேறுகிறார் என்ற எண்ணம் பார்வையாளர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், இதில் ஏதேனும் டுவிஸ்ட் இருக்கின்றதா என்பதை இன்று தான் காண வேண்டும்.
ஆனால் இன்று வெளியாகிய ப்ரொமோ காட்சியில் வேடர்கள் டீமில் 7 பேர் இருக்கும் நிலையில், காடர்கள் டீமில் ஆறு பேர் மட்டுமே உள்ளனர். இதனால் காயத்ரி வெளியேற்றப்பட்டுள்ளாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேடர்கள் டீமில் தலைவர் பதவிக்கான போட்டி அர்ஜுன் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.