பதறி அடித்து ஓடிய அர்ஜுன்.... தலைத்தெறிக்க விழுந்த போட்டியாளர்! சிங்க பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா
சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐஸ்வர்யா தன்னை சிங்கப்பெண்ணாக மீண்டும் நேற்றைய நிகழ்ச்சியில் தன்னை நிறுபித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது.
வெளியில் அதிகம் போட்டியாளர்கள் சென்று விட்டனர். இருப்பினும் வழக்கமான பரபரப்புடன் நிகழ்ச்சி தொடர்ந்த நடந்து வருகிறது.

நேற்று இந்த வாரா அணியின் தலைவரை தேர்வு செய்ய டாஸ்க் கொடுக்கப்பட்டு அணிக்கான தலைவர் தேர்வு நடைபெறுகின்றது.
வேடர் அணியில் இருந்து நாராயணன் மற்றும் ஐவர்யா மோதினார்கள். மணல் மூட்டையை தூக்கி கொண்டு ஒருத்தரை ஒருத்தர் துரத்தி கொண்டு ஓட வேண்டும்.
முதலில் யார் துரத்தி முன்பு செல்பவரை தொடுகின்றார்களே அவர்கள் வெற்றியாளர். ஆண்களுக்கு 10 கிலோ மணல் மூட்டை பெண்களுக்கு 5 கிலோ மணல் மூட்டை என்று அர்ஜூன் விதியை அறிவிக்கின்ரார்.

உடனே ஐஸ்வர்யா பெண்கள் எதற்கும் சலைத்தவர்கள் இல்லை என்பதை நிறுபிக்கவே சர்வைவர் வந்தேன் நானும் 10 கிலோ மணல் மூட்டையை தூக்குகின்றேன் என்று களத்தில் இறங்குகின்றார்.
அவரை அர்ஜூன் பாராட்டி போட்டியை ஆரம்பித்தனர். நாராயணணும், ஐஸ்வர்யாவும் ஒருவர் பின் ஒருவர் வேமாக ஓடுகின்றனர். ஒரு இடத்தில் தவறி நாராணன் விழுந்து விடுகின்றார். உடனே பதறியடித்து ஓடி போய் அர்ஜுன் கைகொடுத்தார்.

பிறகு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் ஐஸ்வர்யா நாராயணனுக்கு போட்டி நடைபெற்றது.
10 கிலோ மணலுடன் ஓடிய சிங்கப்பெண் ஐஸ்வர்யா வெற்றி பெற்றார்.
அவரே வேடர் அணியின் தலைவர். காடர் அணியின் விக்ராந்த் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். ஏற்கனவே அணி தலைவரை தெரிவு செய்வதற்கான ஒரு போட்டியில் நந்தாவுக்கு சமமாக பாரம் தூக்கி தோற்றாலும் தன்னை நிறுபித்திருந்தார். ஜஸ்வர்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.
