Super Singer: தலையில் கரகம்..... காலில் கட்டப்பட்ட கட்டை! நடுவர்களை மிரள வைத்த சரண் ராஜா
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 11ல் சரண் ராஜா தலையில் கும்பம் மற்றும் காலில் கட்டைகளை கட்டிக்கொண்டு அரங்கத்தில் நின்று தனது திறமையை வெளிக்காட்டியுள்ளது நடுவர்களை மிரள வைத்துள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 11வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், தற்போது சரண் ராஜா பாடிய பாடலைக் கேட்டு அரங்கமே மெய் மறந்து போயுள்ளது.

இளையராஜாவின் தீவிர ரசிகனான இவர், அவரை நேரில் சென்று சந்தித்து ஆசியும் வாங்கி வந்தார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் சரண்ராஜாவின் திறமையினை அவதானித்த நடுவர்கள் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர். அதாவது நாட்டுப்புறக் கலைகளை வெளியுலகிற்கு பறைசாற்றும் விதமாக தலையில் கரகத்தையும், காலில் கட்டைகளையும் வைத்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |