Super Singer: ஏழரை கிலோ லட்டை சாப்பிட்ட சரண்! அரங்கத்தில் அரங்கேறிய முத்தமழை
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 11 வது சீசன் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் ஒன் அன் ஒன் ரவுண்டில் சரண் ராஜா மற்றும் பூமணி இருவரின் அன்னை பார்த்த பார்வையாளர்கள் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 11வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், இளையராஜா பாடல்களைப் பாடி அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார் சரண் ராஜா.

இவர் சமீபத்தில் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து ஆசிர்வாதம் கூட வாங்கி வந்தார். மிகவும் வெகுளித்தனமான இவரது பேச்சுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒன் அன் ஒன் ரவுண்டில் சரண் ராஜா மற்றும் பூமணி இருவரில் சரண் ராஜாவிற்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
இதனை குறித்து பேசும் போது சரண் பூமணியை விட்டுக் கொடுக்காமலும், பூமணி சரணை விட்டுக்கொடுக்காமலும் பேசியுள்ளனர்.
மேலும் இவர்கள் இருவரும் அரங்கத்தில் வைத்து முத்தத்துடன் பரிமாறிக்கொண்ட அன்பைப் பார்த்து அரங்கமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. சென்னையில் வந்து தான் சாப்பிட்ட ஏழரை கிலோ லட்டு, டீ-க்காக ஏகப்பட்ட காசை செலவு செய்தது பூமணி தான் என்றும் உண்மையைக் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |