Super Singer: ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீரில் ஆழ்த்திய நிகில்.. நடந்தது என்ன?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நிகில் பாடிய பாடலை ஒட்டுமொத்த அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 தற்போது இறுதி கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது.
பல வாரங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த பேட்டியில் இதுவரை ஏழு போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டு தங்களது குரல் திறமையினை வெளிக்காட்டி நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகின்றனது.
நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலி, சரண்ராஜா, தர்ஷனா, ஆபிரகாம் என ஏழு பேர் உள்ளனர். இவர்களுக்கு செமி பைனல் சுற்று நடைபெற்று வருகின்றது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நிகில் தனது திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மேலும் மேடையிலேயே அவர் கண்கலங்கியுள்ளதுடன், அவரைப் பார்த்த சக போட்டியாளர்களும் கண்கலங்கியுள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |