Super Singer: சூப்பர் சிங்கர் மேடையை தெறிக்கவிட்ட சிறுமி... நடுவர்கள் கொடுத்த ரியாக்ஷன்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி என்ற சிறுமியின் பாடலைக் கேட்டு அரங்கமே ஆட்டம் போட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் Vibe Songs என்ற தலைப்பில் குழந்தைகள் பாடி வருகின்றனர். இதில் காயத்ரி என்ற சிறுமி கரு கரு கருப்பாயி என்னும் பாடலைப் பாடி அசத்தியுள்ளார்.
குறித்த பாடலைக் கேட்ட சக போட்டியாளர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட அசல் கோளாறுடன் நடுவராகிய மனோ அட்டகாசமாக வைப் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |