Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம்
Duet Round சுற்றில் போட்டியாளர்கள் நடுவர்களை வியக்க வைக்கும் அளவுக்கு பாடல் பாடி அசத்தியுள்ளனர்.
Super singer
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது.
தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
இறுதியில் நடந்த குழப்பம்
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இந்த வாரம் Duet Round போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது. இறுதிச்சுற்றிற்கான தேர்வுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் சிறுவர்கள் தங்களின் திறமையின் உச்சத்தை காட்டி வருகிறார்கள்.
அதே போன்று சினிமாவில் பின்னணி பாடகர்களாக இருக்கும் பலர் சிறுவர்களுக்கு துணையாக பாடி வருகிறார்கள். அதில் பாடகர் மனோ கரு கரு கருப்பாயி பாடலை பாடுமாறு கேட்ட போது அவர் பாடலை மாற்றி பாடி விடுகிறார். இந்த விடயம் அரங்கத்தில் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |