Super singer மேடையில் பொன்னாடை போற்றி அழகு பார்த்த பிரதீப்- கண்ணீர் விட்ட பெற்றோர்கள்
Super singer மேடையில் யாழ்ப்பாணத்து சிறுமி பாடிய பாடல் நடுவர்கள் உட்பட விருந்தினரையும் கவர்ந்து விட்டது.
Super singer
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது.
தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதீப் கொடுத்த வரவேற்பு
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இந்த வாரம் Celebrating Swarnalatha டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. பாடகி சுவர்ணலதாவின் பாடல்களை குழந்தைகள் தங்களின் குரலில் ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார்கள்.
அதில் சிறுமியொருவர் பாடிய பாடலை கேட்டு நடிகர் பிரதீப் ரங்கநாதன் மெய் மறந்து போகிறார். அத்துடன் நிறுத்தாமல் குறித்த குழந்தையை பாராட்ட வந்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி, அவர்களையும் வரவேற்கிறார்.
ட்ராகன் பட ப்ரமோஷனுக்காக சென்ற குழுவினரின் செயல் ரசிகர்கள் மத்தியில் பலமாக பேசப்பட்டு வருகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |