Super Singer: சூப்பர் சிங்கர் இறுதி மேடையில் இலங்கை குயில்... பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதி வாரத்தினை நெருங்கியுள்ள நிலையில் பைனல் போட்டியாளர்களின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 தற்போது இறுதி கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது.
பல வாரங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த பேட்டியில் ஏழு போட்டியாளர்கள் இறுதி பைனலிஸ்டாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டு தங்களது குரல் திறமையினை வெளிக்காட்டி நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகின்றது.
நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலி, சரண்ராஜா, தர்ஷனா, ஆபிரகாம் என ஏழுபேர் உள்ள நிலையில், தற்போது இவர்களின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் இலங்கை குயில் திஷாதனா கடந்து வந்த பாதையினை ப்ரொமோ காட்சியாக வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள தற்போது இறுதி மேடையில் இருக்கின்றார். சூப்பர் சிங்கரில் இவர் மகுடம் சூடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |