இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க: வாழ்நாள் முழுவதும் உயர் ரத்த அழுத்தம் வராதாம்

health blood pressure hypertension high pressure
By Manchu Jan 27, 2022 09:10 AM GMT
Report

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை முறை நோய்களில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம். இது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் அளவில் கொடியது.

எப்போது ஒருவரது இரத்த அழுத்தம் வழக்கத்திற்கு அதிகமான அளவில் உயரும் போது, அதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும்.

தற்போதைய வேகமான வாழ்க்கை முறை மற்றும் அளவுக்கு அதிகமான வேலைப்பளு காரணமாக, அனைவருமே ஒருவித மன அழுத்தத்தில் உள்ளோம்.

அதுவும் கொரோனா பரவ ஆரம்பித்த பின்னர், பலருக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியிருப்பதால், நீண்ட நேர வேலையின் காரணமாக மன அழுத்த அளவு இன்னும் அதிகரித்து உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதால், அது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அடிக்கடி தலைவலி, மூக்கில் இரத்தம் வடிதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

இவை அனைத்தும் உயர் இரத்த அழுத்தத்திற்கு மட்டும் அறிகுறிகள் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் மற்றும் இரத்த அழுத்தம் கடுமையாக அதிகரிக்கும் வரை எந்த அறிகுறிகளும் அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.

ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் இருக்க தினமும் மனதை அமைதிப்படுத்தும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதோடு, ஒருசில உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

மாதுளை

இந்த சுவையான சிவப்பு நிற பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் திறன் கொண்டவை. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு பௌல் மாதுளையை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுங்கள்.

நாவல் பழம்

உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை சுருங்க வைக்கும். நாவல் பழத்தில் உள்ள பொட்டாசியம், தசைகளுக்கு மிகவும் நல்லது.

இந்த நாவல் பழம் உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க உதவுவதோடு மட்டுமின்றி, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும் நல்லது.

எனவே நாவல் பழம் சாப்பிட்டால், சளி பிடிக்கும் என்று நினைத்து, அது கிடைக்கும் போது வாங்கி சாப்பிடாமல் இருந்து விடாதீர்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் செரிமான அமைப்பால் நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்படும் நைட்ரேட்டுகள் உள்ளன. ஆகவே தான் பீட்ரூட் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கூறப்படுகிறது.

ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அல்லது சமைத்த ஒரு பீட்ரூட், அதை சாப்பிட்ட 2-3 மணிநேரத்தில் உயர் இரத்த அழுத்த அளவை கணிசமாக குறைக்கக்கூடியது.

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், உடலினுள் மாயங்களை ஏற்படுத்தும் திறனைக் கொண்டது. இரத்த அழுத்த நோயாளிகள் தங்களின் உணவில் பூண்டு சேர்த்து வந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று குறைக்கும் மற்றும் ஒருவர் ஆரம்பத்தில் இருந்தே தினமும் தங்களின் உணவில் பூண்டு சேர்த்து வந்தால், இரத்த அழுத்த பிரச்சனையே வராது.

வெந்தயம்

வெந்தய கீரை மற்றும் வெந்தய விதைகள் இரண்டிலுமே நார்ச்சத்து, கால்சியம் போன்றவை அதிகமாக உள்ளது மற்றும் இவை உடலில் எல்டிஎல்/டிஜி அளவைக் குறைக்கின்றன, இதன் விளைவாக இரத்த அழுத்தம் குறைக்கிறது.

எனவே தினமும் உங்கள் உணவில் வெந்தயம் அல்லது வெந்தய கீரையை சேர்த்து வாருங்கள். இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம்.

முடிவு

ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உணவுகள் பெரிதும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே ஆரோக்கியமான உணவுகளுடன், மிதமான அளவில் உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதுவும் வீட்டில் இருந்து பணிபுரியும் போது, சரியான தூக்கத்தை வழக்கத்தை மேற்கொள்ள முயற்சித்தால், உடல் ஆரோக்கியமாக நோயின்றி இருக்கும்.

எனவே உங்களுக்கு உயிரைப் பறிக்கும் திறன் கொண்ட உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளுடன், உடற்பயிற்சி, சரியான தூக்கம் போன்றவற்றை பெற முயலுங்கள்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US