100 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி
ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் ஒருவருடைய பிறப்பு ராசியில் கிரகங்களின் இடப்பெயர்வு நேரடியாக தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், கிரனங்களின் அரசனாக திகழும் சூரியன் மார்ச் 15, 2026 அன்று மீன ராசிக்குள் நுழைகிறார், ஏற்கனவே சுக்கிரன் மீன ராசியில் இருப்பதால், சூரியனும், சுக்கிரனின் அரிய இணைவால் சக்திவாய்ந்த சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகப்போகிறது.

ஜோதிடத்தில் அரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இணைப்பால், 12 ராசிகளுக்குமே குறிப்பிடத்தக்க வகையில் சுப பலன்கள் கிடைக்கப்போகின்றது. இருப்பினும் அதிர்ஷ்டத்தின் உச்ச பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

சூரியன், சுக்கிரனின் அரிய இணைவால் உருவாகும் அதி சக்திவாய்ந்த சுக்ராதித்ய ராஜயோகமானது மிதுன ராசியினருக்கு வாழ்வில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றது.
இந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கும் எந்த விடயமும் இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும். சூரியனின் ஆசியால் உயர் பதவியில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனும் ராசியில் உச்சம் கொடுப்பதால், இதுவரையில் இல்லாத செவ்வ செழிப்பை அனுபவிப்பார்கள்.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதால் மனமகிழ்ச்சியடைவார்கள்.
துலாம்

சுக்கிரனால் ஆளப்படும் துலா ராசியினருக்கு குறித்த ராஜயோகம் உருவாகுவதால், இவர்கள் எதிர்பாரத வகையில் நிதி நிலையில் அசுர வளர்ச்சியடைவார்கள். வருமானத்துக்கான பல வழிகள் திறக்கும்.
புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட விடயங்கள் இந்த காலகட்டத்தில் எளிதில் கைமேல் வந்து கிடைக்கும். அதிகாரம் மிக்க பதவியில் அமரும் வாய்ப்பு காணப்படுகின்றது.
குறிப்பாக கூட்டு வணிகத்தில் அல்லது இறக்குமதி-ஏற்றுமதி துறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலகட்டடம் பாரிய பொருளாதார ஏற்றத்தை கொடுக்கும்.
மீனம்

மீன ராசியில் சூரியன், சுக்கிரனின் இந்த அரிய இணைப்பு நிகழ்வதால் இவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகின்றது. தொட்டதெல்லாம் வெற்றியாகும் பொற்காலத்தை அனுபவிக்கப்போகின்றார்கள்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்களால் பெரியளவில் பணவுதவி கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியில் நிம்மதியான உணர்வு இருக்கும்.
நிதிநிலை அதிகரிப்பதால் இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். மனநிலையில் தெளிவு பிறக்கும். சுக்கிரன் ஆசியால் ஆடம்ப பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |