ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகப்பெயர்ச்சி ராசிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு கிழமை நாட்களின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
தற்போது சூரியன் மற்ற கிரகங்களுடன் இணையும் போது பல சுப யோகங்கள் உருவாகிறது. அந்த வகையில், சூரியனும் சனிபகவானும் பிப்ரவரி 2025 இல் ஒன்றாக சந்திக்கப்போகின்றனர்.
இது மாசி மாதம் 12ம் திகதி நடைபெறப்போகின்றது. இதன் காரணமாக பல சுப பலன்களை சில ராசிகள் பெறப்போகின்றது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் | - சூரியன், கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது சிம்ம ராசியின் ஏழாவது வீட்டில் நகர்கிறார்.
- தற்போது இருக்கும் வேலையை விட பல புதிய நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
- பணத்தின் லாபம் அதிகமாக கிடைக்கும் காலகட்டம் இது.
- சூரியன்-சனி இணைவு காரணமாக இதுவரை ஏதா ஒரு காரணத்தினால் நடைபெறாத வேலை தறபோது நிறைவடையும்.
- முன்னர் இருந்ததை விட உங்கள் குணத்தில் பல மாற்றத்தை உணர்வீர்கள்.
|
தனுசு | - தனுசு ராசியின் ஒன்பதாவது வீட்டின் அதிபதி சூரியன் ஆவார் அவர் தனுசு ராசியின் மூன்றாவது வீட்டில் சனியுடன் இணைவார்.
- இந்த சூழ்நிலையில் தனுசு ராசிக்கு ஏற்றவாறு அனைத்து நன்மைகளும் சாதகமாக அமையும்.
- நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- பல ஒப்பந்தங்கள் மூலம் நல்ல பண லாபத்தை பெற முடியும்.
- தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றிகளையும் அடைவார்கள்.
|
கன்னி | - கன்னி ராசியின் ஆறாவது வீட்டில் சூரியன்-சனி சேர்க்கை உருவாகிறது.
- நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும்.
- பல வழிகளில் பணத்தை சம்பாதிப்பீர்கள்.
- ஆன்மீக விஷயங்களில் அவர்களின் ஆர்வம் அதிகரிக்கும்.
- மாணவர்கள் கல்வியில் உச்ச நிலைக்கு செயற்படுவார்கள்.
-
சூரியன்-சனிபகவானின் சேர்க்கை கடந்த காலத்தில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கும்.
- செய்யும் தொழிலில் பல நன்மைகளும் லாபமும் வந்து சேரும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)