சுகர் நோயாளிகளும் விரும்பி குடிக்கும் சுக்கு காபி! வெறும் 2 நிமிடத்தில் ரெடி
இஞ்சி, உடலுக்கு பல்வேறு நன்மையளித்து வருகிறது.
அதேபோல் அதன் காய்ந்த நிலையான சுக்குவும், அதேயளவு நன்மையை அளித்து வருகிறது.
சுக்கை, நாம் தினசரி காபியில் கலந்து குடிக்கலாம். சுக்கு காபி, நல்ல வாசனையை தருவதோடு மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற ஒரு பானமாக இது உள்ளது.
சுக்குவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன மழைக்காலங்களில், சுக்கு காபி அருந்துவதன் மூலம், சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பினை தடுக்கலாம்.
இரைப்பை தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது உணவுக்குழாய் பகுதியில் ஏற்படும் தேவையற்ற வாயுக்களை அகற்றி, உணவுக்குழாய் சீராக செயல்பட உதவுகிறது.
உடலில் இருந்துகொண்டு தீமை விளைவிக்கும் நச்சுப்பொருட்களை அகற்றுகிறது. வயிற்று எரிச்சல் மற்றும் உப்பிசத்தை குறைக்கிறது தோல் அரிப்பை தடுக்கிறது.
எச்சரிக்கை
சுக்கு காபியில் இவ்வளவு நன்மைகள் இருப்பினும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது 3 தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஏனெனில், இது தொண்டையில் எரிச்சல் உணர்வை தூண்டச்செய்யும்.
சுக்கு காபி
- தண்ணீர் – 4 கப்
- ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி
- ஒரு தேக்கரண்டி கறுப்பு மிளகு பொடி
- ஒரு தேக்கரண்டி காபி பொடி
- சில துளசி இலைகள் ஒரு தேக்கரண்டி
- சீரகம் ஏலக்காய் – 4
- வெல்லம் – 3 தேக்கரண்டி
செய்யும் முறை
சிறிது உப்பு தண்ணீரில் சிறிது வெல்லம் சேர்த்து அது கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
பின் அதனுடன் சுக்கு பொடி, சீரகம், காபி பொடி, மிளகு பொடி கலந்து கொதிக்க வைக்கவும்.
பின் துளசி இலைகளை சேர்க்கவும் அதனுடன் ஏலக்காய் பொடி, உப்பை சேர்க்கவும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பருகலாம்.