தலையை துண்டாக்கி தண்ணீர் வழங்கிய எதிரிகள்! வஞ்சம் தீர்க்கப்பட்ட தமிழ் சாம்ராஜ்யத்தின் வரலாறு
பொதுவாக நவீன வளர்ச்சிக் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முறை தொடக்கம், வரலாற்று சான்றுகள் வரை மறைந்து ஒடுங்கி விட்டது. இது போன்று இவ்வாறு ஒடுங்கிய ஒரு வரலாற்று இடங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மெய்சிலிர்க்க வைக்கும் மண்ணின் பெருமை
இதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் என்ற ஊர் சுமார் இரண்டு அல்லது மூன்று மைல் தூரத்தில் பிரான்மலை என்ற பெயருடன் அழகிய ஊர் உள்ளது. இந்த மலை, சங்க இலக்கிய காலங்களில் “பறம்பு மலை ” என்ற பெயரும் இருந்தது.
இந்த ஊரை குறுநில மன்னரான வேளிர் குலத்தில் பிறந்த “வேள்பாரி” எனும் அரசன் ஆட்சி செய்தான் இவரின் குலத்தின் பெயரைக் கொண்டு ஆட்சி செய்ததால் இவன் ஒரு வள்ளவனாக கருதப்பட்டான்.
மேலும் இவனது ஆட்சி கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவையாக இருந்தது. இந்த நாட்டின் மன்னன் வேள்பாரி என்று கூறும் போது அவனின் வீரத்தை விட அவனின் கொடை தான் ஞாகபகத்திற்கு வரும், அந்தளவிற்கு நாட்டு மக்களுக்கு “இல்லை” என்ற வார்ததையை கூறாமல் வாரி வழங்கும் மன்னனாக திகழ்ந்தார்.
இவனின் கொடைக்கு வள்ளலுக்கு எதிரிகளே தோற்றுப்போவர்களாம் அந்தளவு மக்களையும் மதித்து ஆட்சிச் செய்யும் அருமையான ஆட்சியாளன், இவனின் பெருமையை பல இலக்கியங்கள் இன்றும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.
அந்த வகையில் பறம்பு மலையின், சூரியன் போல் காட்சியளிக்கும் “வேள்பாரி” மன்னின் சிறப்புக்களையும், அவனின் ஆட்சியின் மகிமையும் கீழுள்ள வீடியோ காட்சியில் தெளிவாக பார்க்கலாம்.