வயிற்றின் எந்த பகுதிகளில் வலி ஏற்படுவது ஆபத்து? இனியும் அலட்சியம் வேண்டாம்!
பொதுவாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எக்போதாவ வயிற்று வலி ஏற்படுசவது இயல்பான விடயம் தான்.
உணவு ஒவ்வாமை, செரிமான பிரச்சினை, துரித உணவுகள், ஆரோக்கியமற்ற எண்ணெயில் பொரித்த உணவுகள் என சுவைக்கு அடிமையான நாம் கண்டதையும், கண்ட நேரத்தில் சாப்பிடுவது என பல்வேறு காரணங்கள் வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.

ஆனால் உடல் ஆரோக்க்கியத்தில் வயிறு மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் இன்றியமையாதது. வயிற்றில் உண்டாகும் கிருமித்தொற்றுகள் நம் உடலின் பல நோய்களுக்கு காரணமாகின்றன.
அந்தவகையில் வயிற்றில் எந்த இடங்களில் வலி ஏற்படுவது கடுமையான ஆரோக்கிய பிரச்சினையின் அறிகுறியாக இருக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த இடத்தில் வலி இருக்கா?
வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கமாக வலி எடுத்தால், கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேல்வயிற்றில் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால், இரைப்பை, முன்சிறுகுடல், கணையம் ஆகியவற்றில் பிரச்னை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மேல் வயிற்றில் இடது பக்கத்தில் வலி உண்டானால், மண்ணீரலில் பிரச்னை இருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

வயிற்றின் நடுப்பகுதியில் இடது பக்கமாக ஏற்படும் வலிக்கு இடது சிறுநீரகத்தில் இருக்கும் பிரச்சினை கூட காரணமாக இருக்கலாம். அதுலே வலது பக்கத்தில் தொடர்ந்து வரியை அனுபவித்தால் வலது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.
நடு வயிற்றின் மத்தியபகுதியில் வலி ஏற்படுகிறது என்றால், சிறுகுடலில் பிரச்னை என்று யூகிக்கலாம்.
அடிவயிற்றின் வலது பக்க வலிக்குக் குடல் வால் அழற்சி, வலது சிறுநீர்க்குழாய்க் கல் (Ureteric Stone), கருக்குழாய் பாதிப்பு, ஏறுகுடல் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்களாகஇருக்க கூடும்.
அடிவயிற்றில், தொப்புளுக்குக் கீழ் வலி வந்தால், கருப்பை அல்லது சிறுநீர்ப்பை கோளாறு காரணமாகும்.
அடிவயிற்றில் இடது பக்கத்தில் வலித்தால், இடது சிறுநீர்க்குழாய் கல்/ இறங்கு குடல் கோளாறு இருக்க வாய்ப்பிருக்கிறது.

பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம். வயிற்றில் இந்த இடங்களில் வலியை அணுபவித்தால் அலட்சிப்படுதத்தாமல் உரிய முறையில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
பெரும்பாலான நேரங்களில் வயிற்றில் வாயு உருவாவதும் வயிற்று வலிக்கு காரணமாகிறது, காரம் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மைதா உணவுகள் இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது வயிற்றில் வாயு தொல்லை ஏற்படுகிறது, இதனாலும் வலி ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி
குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது வயிற்று வலி சார்ந்த பிரச்சனைகளாக தான் இருக்கும், இதற்காக நீங்கள் பதட்டப்பட வேண்டாம், குழந்தைகளுக்கு அதீத மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இருக்கும் போது மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெரும்பாலும் அஜீரணக் கோளாறால் தான் குழந்தைகளுக்கு வயிற்றில் வலி ஏற்படும், முதுகை வளைத்தபடி இருப்பது, உணவை சரியாக சாப்பிட முடியாமல் இருப்பது, விக்கல், தொண்டையில் அடைப்பு ஏற்படுதல், வாந்தி, அடிக்கடி ஏப்பம் போன்றவை அஜீரணத்திற்கான அறிகுறிகளாக அறியப்படுகின்றது.
எவ்வாறு தவிர்ப்பது?
குழந்தைக்கு பால் கொடுத்து முடித்த உடனே அவர்கள் ஏப்பம் விடுவது அவசியம். குழந்தைகள் பால் குடிக்கும் போது பாலுடன் சேர்த்து காற்றையும் உள்ளே இழுத்துக் கொள்வார்கள். இதனை சரி செய்வதற்கு அவர்களை சரியான முறையில் ஏப்பம் விட வைப்பது அவசியம்.
குழந்தைகள் தூங்கும் போது தலை 6 முதல் 8 இன்ச் வரை உயரமாக வைத்து இருக்க வேண்டும். மெத்தையின் அடியில் செங்கற்கள் அல்லது மரத்தால் ஆன பலகைகளை வைத்து உயரத்தை அதிகரிக்க வேண்டும்.

சோம்பு, இஞ்சி மற்றும் கெமோமில் தேயிலை ஆகியவற்றை எல்லாம் நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிது பட்டைத் தூளை சேர்த்து கொடுக்கலாம். ஆனால் தொடர்ந்து ஒரே இடத்தில் வலி இருக்கும் பட்சத்தில் குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி உரிய முறையில் மருத்து சிகிச்சையை பெற வேண்டியது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |