தனுஷிற்கு தாலி எடுத்து கொடுத்தது யார் தெரியுமா?... லீக்கான அரிய புகைப்படம்! மூன்று நாட்களாகியும் ஓயாத பரபரப்பு..
தனுஷ்- ஐஸ்வர்யா 18 வருட திருமண வாழ்க்கை தற்போது விவாகரத்தில் பிரியவுள்ளது.
இந்த நிலையில் தனுஷின் அரிய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தற்போது அவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனுஷ்- ஐஸ்வர்யா திருமணத்தினை முன் நின்று நடத்தினார்.
ஜெயலலிதாவை தனது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்போல் முகூர்த்தத்திற்கு ரஜினி அழைக்க அவர் வந்து திருமணத்தாலியை எடுத்துக்கொடுக்க தனுஷ் தாலி கட்டினார். மாலையில் நடந்த ரிஷப்ஷனில் கருணாநிதி கலந்துக்கொண்டார்.
ஜெயலலிதா, கருணாநிதி இரு ஆளுமைகள் வாழ்த்த நடந்த திருமணம் முறிவில் முடிந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது புகைப்படத்தினை பகிர்ந்து தனுஷ்- ஐஸ்வர்யா முடிவை மாற்றுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.