வீட்டில் சூடான சாதம் மட்டுமா? அப்போ இந்த மத்தி மீன் குழம்பை காரசாரமாக செய்ங்க
வாரத்தில் இரண்டு அல்லது ஒரு முறையாவது மின் குழம்பு வைப்பது நம்மில் சிலரும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். பொதுவாக குழம்பு செய்ய அதிகமாக மக்கள் நாடும் மீன் மத்தி மீன் தான்.
இதில் பல சத்துக்கள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல் இதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும். இதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையாக செய்வார்கள். இந்த பதிவில் இலங்கையில் செய்யும் முறையில் எப்படி மத்தி மின் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மஞ்சள்
- உப்பு 1 டீஸ்பூன்
- வெங்காயம் 01
- பூண்டு 20 பல்
- கறிவேப்பிலை
- ரம்பை
- இஞ்சி துண்டு
- பச்ச மிளகாய்
- கடுகு 1 டீஸ்பூன்
- பட்டை
- வெந்தயம் 1 டீஸ்பூன்
- சீரகம் 1 டீஸ்பூன்
- மிளகாய் பொடி 3 டீஸ்பூன்
- தசாலா பொடி 2 டீஸ்பூன்
- தண்ணீர் 3 கப்
செய்யும் முறை
முதலில் மத்தி மீனை நன்றாக கழுவி அதை உப்பு மஞ்சள் போட்டு கலந்து வைக்க வேண்டும். இதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய வெங்காயம் வெந்தயம் கடுகு சீரகம் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் ரம்பையும் கறிவேப்பிலையும் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் இறுதியாக இஞ்சியையும் பூண்டையும் இடித்து சேர்க்க வேண்டும். இந்த எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதில் மிகளாய் பொடி மற்றும் மசாலா பொடியை சேர்க்க வேண்டும்.
பின்னர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு கழுவி வைத்துள்ள மீனை சேர்க்க சேர்க்க வேண்டும். மீன் சேர்த்ததன் பின்னர் கரண்டி போடுவதை தவிர்க்கவும். கரண்டி போடுவதால் மீன் உடையும்.
இதை ஒரு 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டு பாருங்கள் சொர்க்கம் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |