தமிழர் பகுதிக்குள் சிதைந்து கிடக்கும் சிவாலயம்! அறியப்படாத வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிப்பு
இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவல பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டு கி.பி 13 மீ நூற்றாண்டிற்கு முற்பகுதியைச் சேர்ந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுக்குளப்பற்று நிர்வாக பிரிவாக இருந்த முன்னரான காலத்தில், இந்த இடம் குமரன்கடவை என அழைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டுடன் அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும் அழிவடைந்த அத்திவாரங்களும் காணப்படுகின்றன.
ஒரு மலையை அண்மித்து இந்த கல்வெட்டு காணப்படுவதுடன், இந்த மலையின் மேல் பகுதியில் திருவாச்சி போன்றதொரு வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளது.