15 வயதில் எஸ்பிபி எடுத்துக் கொண்ட புகைப்படம்.. தீயாய் பரவும் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
தனது பாடல்களால் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்துவரும் எஸ்பிபி-யின் 15 வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் ரசிகர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தார்.
இவர் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேலான பாடல்களை 16 மொழிகளில் பாடியது மட்டுமின்றி, ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் வெற்றி பெற்றவர். மேலும் 6 நேஷனல் பிலிம் விருதுகளை பெற்றுள்ளார்.
அவர் வயதை கணக்கு போட்டு பார்த்தால் பிறந்ததிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு பாடல்கள் பாடியுள்ளாராம். வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே அர்ப்பணித்த இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இழப்பினை இன்றும் தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்கள், இன்று இவரது பாடல்களைக் கேட்டு மனதை தேற்றிக்கொண்டு வருகின்றனர்.
தற்போது எஸ்பிபியின் இளம் வயதான புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. குறித்த புகைப்படம் 15 வயது இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஆகும்.