வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 365 வகை உணவு: மாமியார் வைத்த அசத்தலான விருந்து
இந்திய மாநிலமான ஆந்திராவில் வீட்டிற்கு வந்த மருமகமனுக்கு 365 வகையான உணவுகளை வழங்கி மாமியார் ஒருவர் விருந்து வைத்துள்ள சம்பவம் ஆச்சரித்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பின்பு பெண் வீட்டில் மணமகனுக்கு விருந்து வைத்து உபசரிப்பது தமிழ் பண்பாடுகளில் வழக்கமான ஒன்றாகியுள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நரசாபுரத்தில் மாமியார் ஒருவர் வருடத்தில் 365 நாட்களை கணக்கிட்டு தனது மருமகனுக்கு 365 வகையான உணவுகளை விருந்தாக கொடுத்து அசத்தியுள்ளார்.
ஆந்திராவில் சாய்கிருஷ்ணா என்பவர் தங்க வியாபாரியான வெங்கடேஸ்வர ராவ் -மாதவி தம்பதியின் மகள் குந்தவி ஆகியோருக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
இன்னும் சில வாரங்களில் இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது. இதனிடையே மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த தங்களின் வருங்கால மருமகனுக்கு இந்த பிரம்மாண்ட விருந்தை அவரது மாமியார் அளித்துள்ளார்.
திருமணத்திற்கு முன் பெண்ணின் தாத்தா- பாட்டி தங்கள் பேத்தியைத் திருமணம் செய்து கொள்ளும் இளைஞருக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது பெண்ணின் பெற்றோரும் இதில் தலையிட அது மிகப் பிரம்மாண்டமான விருந்தாக மாறிவிட்டது. இந்நிகழ்ச்சிக்காக 30 வகையான குழம்பு, சாதம், பிரியாணி, பாரம்பரிய கோதாவரி இனிப்புகள், சூடான மற்றும் குளிர் பானங்கள், பிஸ்கட், பழங்கள், கேக் எனச் செய்யப்பட்டு மாப்பிள்ளைக்கு அளிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் பலரும் உணவின்றி தவித்து வரும் நிலையில், ஒரு நபருக்கு எதற்கு இத்தனை வகையான உணவுகள் என்றும் இவற்றை அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கியிருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.