வியர்வை பிரச்சினைகளில் அவஸ்தைபடுகிறீர்களா? இது உங்களுக்கான டிப்ஸ்!
பொதுவாக கோடை காலங்களில் அதிகமாக வியர்க்கும் அது வழமை. ஆனால் எப்போதுமே கோடை காலம் போன்று வியர்த்தால், அது கருத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
அதில் சிலருக்கு முகத்திலும் அந்தரங்க பகுதிகளில் மட்டும் அதிகம் வியர்க்கும்.
இது கட்டாயம் வைத்தியரையோ அல்லது வீட்டு வைத்தியத்திலோ சரிச் செய்யப்பட வேண்டிய விடயமாக பார்க்கப்படுகிறது.
வியர்வை ஏன் எற்படுகிறது?
உடலின் அதிகப்படியான வியர்வைக்கு உடலில் இருக்கும் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் தான் காரணம் என்றும் முகத்தில் ஏற்படும் வியர்வைக்கு கிரானியோஃபேஷியல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அதிகமாக சுரப்பது தான் காரணம் என்றும் ஆய்வுகளில் தெரிய வருகிறது.
அந்த வகையில் அதிகமான வியர்வையை கட்டுபடுத்துவது தொடர்பில் தெரிந்துக்கொள்வோம்.
மேலும் நரம்பு தொகுதிகளில் கோளாறு உள்ளவர்களுக்கு இவ்வாறு அளவுக்கு அதிகமாக வியர்க்கும். உதாரணமாக இதய துடிப்பு, இரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்.
மரபணு பிரச்சினைகள் அதிக வியர்வையை ஏற்படுத்தும். இவ்வாறான பிரச்சினைகள் சுரப்பிகள் அதிகமாக சுரக்கப்படுவதனால் ஏற்படுகிறது.
வெயில், மழை என வானிலை மாற்றங்களினாலும், இந்த பிரச்சனை ஏற்படலாம். மன அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கபட்டவர்களுக்கு இந்நோய் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வியர்வை பிரச்சினைகளை எவ்வாறு சரிச்செய்வது?
அதிகமான நெருக்கடி உள்ள இடங்களுக்கும், வெப்பநிலை அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
வெளியே செல்லும் முன் முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதனாலும் வியர்வை பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
அதிக வியர்வையில் இருக்கும் போது தக்காளி சாற்றை எடுத்து முகத்தில் பூசி, சற்று நேரம் கழித்து முகத்தைக் கழுவவும். இதன் மூலம், முகத்தில் உள்ள துளைகள் மூடப்பட்டு, வியர்வை குறையும்.எலுமிச்சை சாறு பயன்படுத்துவது சிறந்தது.
அந்தரங்கு பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்வதனால் வியர்வை பிரச்சினைகளை கட்டுபடுத்தலாம்.
வியர்வை பிரச்சினைகளின் போது அரிப்பு, எரிச்சல் ஏற்படமாயின் சூடு நீரால் அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். மற்றும் கோட்டன் உள்ளாடைகளை அணிவது சிறந்ததாகும்.