துடிதுடித்த மீனா...சுயநினைவை இழந்த வித்யாசாகர் கடைசியில் யாரிடம் பேசினார்?
திரைக்கலைஞர் மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறப்புக்கு பின்னர் பல வதந்திகள், சர்ச்சைகள் உலாவி கொண்டிருக்கின்றது.
அதில் ஒன்று தான் வித்யாசாகர் அழைபேசியால் பேசியதாக கூறப்படும் தகவல்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனில்லாத நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணியளவில் அவர் உயிரிழந்தார்.
தீயாய் பரவும் வதந்தி
தான் இறப்பதற்கு முன்பு, மகளுக்கு போனை செய்த வித்யாசாகர், "அப்பா பிழைப்பது கடினம்.. அம்மா பேச்சை கேட்டு இனி சமத்தா நடந்துக்கணும்" என்று சொல்லி, போனிலேயே முத்தம் தந்ததாக தகவல்களை பரப்பி வருகின்றனர்.
3 மாத காலம் சுயநினைவே இல்லாத ஒருவர், சாகப் போகும் அன்று மட்டும், போனை போட்டு மகளிடம் எப்படி பேசியிருக்க முடியும்?
இந்த ஒரு சாதாரண விஷயத்தைகூட யோசிக்காமல் போலியான தகவல்களை சிலர் பரப்பி கொண்டு வருகின்றனர்.
இதனை யாரும் நம்பாதீர்கள். பிரபலங்கலாக இருந்தாலும் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான்.
நடிகை மீனாவுக்கு 13 ஆண்டுகால திருமண வாழ்க்கையை மனதார மட்டுமே எண்ணி பார்த்து பூரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் வித்யாசாகர் திரும்பி வராத இடத்திற்கு சென்றுவிட்டார்.
கணவரின் அஸ்தியுடன் துடி துடித்த மீனாவின் நிலையாருக்கும் வரக்கூடாத சோகம்.
அவருக்கு ஆறுதல் கூற முடியா விட்டாலும் பரவாயில்லை போலி வதந்திகள் மூலம் காயப்படுத்த வேண்டாம் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.