16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரிட்டன் அரசின் அதிரடி முடிவு
குழந்தைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 16 வயதிற்குட்பட்டவர்கள் Snapchat, TikTok, Instagram, Facebook, YouTube மற்றும் X போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த அறிவிப்பை வெளியிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடைக்கு உட்படும் செயலிகள்
Snapchat
TikTok
YouTube
X (Twitter)
தடையிலிருந்து விலக்கு பெறும் செயலிகள்
YouTube Kids
குடுபத்தினருடன் தொடர்பில் இருக்க உதவும் WhatsApp,Signalபோன்ற செய்திப் பரிமாற்ற (Messaging) செயலிகள்

இந்த விதிகளை பின்பற்றத் தவறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும்.
குழந்தைகள் அல்ல, நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். மேலும், குழந்தைகளைப் பாதுகாக்க ஆன்லைன் கேமிங், லைவ்ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டிற்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.
இந்த நடவடிக்கைக்கு பிரிட்டனில் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 90%க்கும் அதிகமானோர் இந்தத் தடையை ஆதரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
We are banning social media access for under 16s.
— Keir Starmer (@Keir_Starmer) June 15, 2026
These days kids must find their feet in a world where technology intrudes into every area of their life.
I just can’t let that go on anymore. So we’re giving children their childhoods back. pic.twitter.com/jn7iQrcwk8
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |