திருமணத்தின் பின்னரும் இப்படியா? இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோபிதா துலிபாலா!
நடிகை சோபிதா துலிபாலா வீட்டில் கூட செம கிளாமரான தோற்றத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு Portraits of rest என பதிவிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
நடிகை சோபிதா துலிபாலா
மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலா முதல் படமே ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவர், தனக்கென தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் பின்னரும் செம கிளாமரான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிப்பில் அசத்தி வரும் இவர், ட்ரெண்டிங் உடையில் செம கிளாமர் காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |