படுக்கையறையில் பக்கத்திலேயே தூங்கிய கொடிய விஷப்பாம்பு! வெளியான அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் விடிய விடிய படுக்கையறையில் நல்ல பாம்பு படுத்துறங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடலூரின் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர், வயதான பாட்டி ஒருவர் தன்னுடைய அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை எழுந்த போது தனக்கு அருகே விசித்திரமான சத்தம் கேட்டு எழுந்துள்ளார், அது என்னவென்று பார்த்தபோதுதான் பாம்பு இருந்தது தெரியவந்தது.
உடனடியாக பாட்டி பயத்தில் அலற, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர், உடனடியாக பாம்பு பிடிக்கும் நபரான செல்லா என்பவருக்கும் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த செல்லா, பாம்பை பத்திரமாக பிடித்துள்ளார், அவர் பிடிக்கும் போதே மிகவும் ஆக்ரோஷத்துடன் சீறியுள்ளது.
அன்று மாலை வெளியில் காய்ந்த துணிகளை எடுத்து வந்த போது, தெரியாமல் பாம்பையும் பாட்டி எடுத்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.