Viral Video: படம்பிடித்தவருக்கு மரண பயத்தை காட்டிய பாம்பு... புல்லரிக்க வைக்கும் காட்சி
மின்னல் வேகத்தில் சென்ற பாம்பு தன்னைப் படம்பிடித்த நபரை நோக்கி சீரிய காட்சி வைரலாகி வருகின்றது.
மரண பயத்தை காட்டிய பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு மனிதர்களை பாம்புகள் அச்சுறுத்தி வருவதற்கு காரணம் மனிதர்களால் தமக்கு தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்பது தான்.
இங்கும் பாம்பு ஒன்று செல்வதை நபர் ஒருவர் காணொளி எடுக்கின்றார். குறித்த பாம்பு ஒரு கட்டத்தில் நபரை சீறிக்கொண்டு பின்னோக்கி வந்துள்ளது.
குறித்த நபருக்கு மரணபயத்தையும் காட்டியுள்ளது. என்னதான் பாம்புகள் தனது குணத்தை காட்டினாலும், மனிதர்களும் அதனை படமெடுக்க விடாமல் துரத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |