திமிங்கலத்தின் வாந்தியை கடத்தி சென்ற நபர்கள்! அதன் மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
தமிழகத்தில் திமிங்கலத்தின் வாந்தியை கடத்தி சென்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியின் திருச்செந்தூர் அருகே அமர்கிரீஸ் கடத்தியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அமர்கிரீஸ் என்பது திமிங்கலத்தின் வயிற்றில் உருவாகும் மெழுகு பொருள், இது உயர்ரக வாசனைத் திரவியம் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கார் ஒன்றை சோதனை செய்ததில் 2 கிலோ எடையுள்ள அமர்கிரீஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும், இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், அமர்கிரீஸ் கடத்தி வந்த இளங்கோவன், வெங்கடேஷ், ஜான் பிரிட்டோ, ராஜா முகமது, முகமது அஸ்லாம் மற்றும் ராம்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.