நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் அடுத்த விஷேசம்- படுமாஸாக வெளியான புகைப்படம்
3வது மகனின் முதல் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மாத்திரம் வெளிக்காட்டி தற்போது உச்சத்தில் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதனை தொடர்ந்து, மதராஸி, பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் பரபரப்பாக உருவாகி வருகின்றன.
விஷேசத்தில் வெளியான புகைப்படம்
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என ஒரு மகள் மற்றும் மகன் இருந்த நிலையில் கடந்த வருடம் 3வது மகன் பிறந்துள்ளார். அவருக்கு பவன் என பெயர் வைத்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவகார்த்திகேயன், 3வது மகன் பவன் முதல் நாள் இன்று குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.
மகனின் பிறந்த நாளுக்கு மனைவி மற்றும் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். முதல் முதலில் மகனின் முகத்தையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |