நரைமுடிக்கு தீர்வு தரும் எண்ணெய்: வாரத்திற்கு 2 தடவை போடுங்க
“இளநரை” என்பது வயது மூப்பின் அறிகுறியாகக் கருதப்படும் இயற்கையான மாற்றமாகும். ஆனால் தற்போது இருக்கும் தவறான வாழ்க்கை முறை காரணமாக சிறு வயது பிள்ளைகளுக்கும் வந்து விடுகிறது.
இன்னும் சிலருக்கு வேலையின் அழுத்தம், மன அழுத்தம் ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபணுக்கள் உள்ளிட்ட காரணங்களாலும் இளம் வயதிலேயே வந்து விடுகிறது.
இதனை எப்படி சரிச் செய்யலாம் என்பதனை கூடிய விரைவில் கண்டறிய வேண்டும். இல்லாவிட்டால் தலைமுடி முழுவதும் நரை முடி வளர்ந்து, பார்ப்பதற்கு வயதானவர்கள் போன்று காட்சிக் கொடுப்பீர்கள்.
அந்த வகையில், இளநரை பற்றி எமது பதிவில் சில விவரங்களை தெரிந்து கொண்டு, அதற்கு நிவாரணம் கொடுக்கும் எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதனையும் எம்முடைய பதிவில் நீங்கள் காணலாம்.
இளநரை ஏன் வருகிறது?
ஒருவரின் தலைமுடியின் வண்ணத்தை நிர்ணயிக்கும் மெலனின் (Melanin) என்ற பொருள் தேக்கம் குறையும் பொழுது தலையில் கருப்பாக இருந்து தலைமுடி வெள்ளையாக மாறுகிறது. மெலனின் உற்பத்தியை பாதிக்கும் எந்த காரணமும், நரைமுடிக்கு காரணமாக அமையலாம்.
இளநரையை முக்கிய காரணிகள்
- மரபியல் (Genetics)
- மனஅழுத்தம் (Stress)
- ஊட்டச்சத்து குறைபாடுகள் (Vitamin B12, Iron deficiency)
- தவறான உணவுமுறை
- தூக்கக்குறைவு
- ரசாயனப் பொருட்கள் கொண்ட ஷாம்பூ, ஹேர் டை
மேற்குறிப்பிட்ட சுகாதார காரணங்கள் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதற்கான தீர்வு உள்ளது. நரையை அழகியல் கோணத்தில் பார்க்கும் பொழுது, அதற்கு நிவாரணம் கொடுக்கும் இயற்கை வழிகள் உள்ளன.
இளநரைக்கு நிவாரணம் தரும் எண்ணெய்
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை – 1 கைபிடி அளவு
- கருஞ்சீரகம் (Black seeds/Karunjeeragam)– 1 மேசை கரண்டி
- நெல்லிக்காய் பொடி (Amla) – 2 மேசை கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 1 கப்
தயாரிப்பு படிமுறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். அதில் நெல்லிக்காய் பொடி, கறிவேப்பிலை, கருஞ்சீரகம் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு, மீதமான தீயில் வேக வைக்கவும்.
கறிவேப்பிலை வாடும் வரை காய்ச்சி, அப்போது எண்ணெய்யின் நிறம் மாறுவதை நீங்கள் காணலாம். வாசம் வரும் அடுப்பை அணைத்து விட்டு, எண்ணெயை குளிர வைக்கவும்.
முழுவதும் குளிர்ந்ததும், வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து கொள்ளலாம். இதனை வாரத்தில் 2 முறை தலைக்கு தேய்த்து 1-2 மணி நேரம் தலையில் ஊற வைக்கவும்.
அதன் பின்னர், சுடுநீரால் ஷாம்பூ போட்டு தலையை நன்கு கழுவ வேண்டும். தொடர்ச்சியாக 2 மாதங்கள் பயன்படுத்தினால் தலைமுடி கருப்பாக மாறுவதை பார்க்கலாம்.
ஆங்கில மருத்துவ குறிப்புக்கள்
- நல்ல உணவுமுறைகளை தினமும் கடைபிடிப்பது அவசியம். (இரும்புச் சத்து, நார்ச்சத்து)
- மன அழுத்தம் குறைக்க முயலவும்.
- B-complex மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
