Siragadikka Aasai: விருது வாங்குவதற்கு இப்படியொரு நடிப்பா? வாயடைத்துப் போன தோழி
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா சமூக சேவை செய்வதாக கூறி, பொய் மேல் பொய் கூறி நடிக்கும் காட்சி நாளைய ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
விஜயாவின் நடன பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையால் கைதான ரோகினியை மீனா புகார் எதுவும் கொடுக்காமல் காவல் நிலையத்திலிருந்து அனுப்பிவிட போலிசாரிடம் கூறியுள்ளார்.
வீட்டிற்கு வந்த ரோகினியை க்ரிஷ் ஆசையாக கட்டிப்பிடித்து பிள்ளை பாசத்தை வெளிக்காட்டினார். பின்பு வீட்டில் உள்ளவர்கள் சந்தேகப்பட்ட நிலையில், க்ரிஷ் இயல்பாக இருப்பது போன்று நடிக்க ஆரம்பித்துள்ளான்.
இந்நிலையில் விஜயா டாக்டர் பட்டம் வாங்குவதற்கு சமூக சேவை செய்வதாக ஆக்ஷன் காட்டி வருகின்றார். இதில் அன்னதானம் போடுவது மட்டுமின்றி, மீனாவை மருமகளாக கொண்டு வந்ததையும் கூறி ஆக்ஷனில் கலக்கி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
