Siragadikka Aasai: ரோஹினியை அடித்து நொறுக்கிய விஜயா... பரிதவிக்கும் முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் திருட்டு செயினை தனக்கு கொடுத்த ரோகினியை விஜயா சரமாரியாக தாக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைத்துள்ளார். ஆனால் தற்போது ரோகினியை மன்னித்து மனோஜுடன் கடைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்காமல் தற்போது ரோகினி மீண்டும் விஜயாவிடம் சிக்கியுள்ளார். அதாவது ரோகினி வாங்கிக் கொடுத்த செயின் திருட்டு செயின் என்பது விஜயாவிற்கு தெரிந்துள்ளது.
மீண்டும் விஜயாவின் மனதை மாற்ற புடவை வாங்கிக் கொடுத்த ரோகினிக்கு சரமாரியாக அடி விழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |