Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி வாங்கிக் கொடுத்த செயினை விஜயா போட்டுக்கொண்ட நிலையில், சீதாவின் காதலரும், முத்துவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி விஜயாவிடம் பொய்கூறி மாட்டிக் கொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றார். இந்நிலையில் சிட்டியிடம் திருட்டு செயின் என்று தெரியாமலேயே குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார்.
இதனை விஜயாவிக்கு கொடுத்துள்ள நிலையில், அவர் முதலில் வாங்க மறுத்துள்ள நிலையில், பின்பு அதனை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டுள்ளார்.
பின்பு சீதாவின் காதலரான ட்ராபிக் போலிசை முத்துவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.
திருட்டு நகை என அறிந்ததும் விஜயாவிடம் இருந்து ரோகினி எவ்வாறு தப்பிப்பார் என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |