மாலையும் கழுத்துவமாக வந்த மனோஜ்.. 2ஆவது திருமணம் செய்தாரா? அதிர்ச்சியில் குடும்பத்தினர்
சிறக்கடிக்க ஆசை சீரியலில், 2ஆவது திருமணம் செய்து கொண்ட மனோஜ் மாலையும் கழுத்துவமாக வீட்டிற்கு வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியல், மருமகள்- மாமியார் இருவருக்கும் இடையில் ஏற்படும் பிர்ச்சினைகளை கருவாகக் கொண்டு சீரியல் நகர்த்தப்படுகிறது.
அந்த வகையில், ரோகிணி - மனோஜ் இருவரும் கடந்த சில வாரங்களாக பிரச்சினை பேசாமல் இருக்கிறார்கள். விஜயா, ரோகிணி பணக்கார பெண் இல்லாத காரணத்தினால் மனோஜ்மிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று சூழ்ச்சி செய்து வருகிறார்கள்.
மாலையும் கழுத்துமாக வந்த மனோஜ்
இந்த நிலையில், சீதாவின் காதலை ஏற்க மறுக்கும் முத்து, வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால் தங்கை காதலித்தவரை திருமணம் செய்து வைத்தால் அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் முடிவில் இருக்கிறார்.
இப்படியொரு சம்பவம் சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், மனோஜ் மாலையும் கழுத்துமாக வந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“மனோஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றால் ரோகிணியின் நிலை என்னாகும்..” என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
