Siragadikka Aasai: புதிய காதலருடன் கொஞ்சி பேசும் ரோகினி... பயங்கர கடுப்பில் மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மனோஜை கடுப்பேற்ற போனில் புதிய காதலருடன் பேசுவது போன்று நாடகம் போட்டுள்ள நிலையில், மனோஜ் பயங்கர கடுப்பில் காணப்படுகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி விஜயாவிடம் பொய்கூறி மாட்டிக் கொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சித்து திருட்டு செயினை வாங்கி வைத்துள்ளார்.
இந்த பிரச்சனை எப்பொழுது பூதாகரமாக வெடிக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சீதா அருண் காதலுக்கு முத்து பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ரோகினி மனோஜ் மனதை மாற்றுவதற்கு மற்றொரு நாடகத்தை நடத்தி வருகின்றார்.
அதாவது போனில் மற்றொரு ஆணுடன் அதிகமாக பேசுவது போன்று சீன் போட்டுள்ளார். ஆனால் இது உண்மை என்று நம்பிய மனோஜ் கோபத்திலும், பொறாமையிலும் பொங்குகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
