Siragadikka Aasai: நீதிமன்றத்தில் சுயரூபத்தை காட்டிய ரோகினி! கதறி துடித்த மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மற்றும் மனோஜின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், ரோகினி அடித்துள்ள அந்தர் பல்டி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மீனா முத்துவிற்கு முதலில் உண்மை தெரிந்த நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் வந்து உண்மையைக் கூறியுள்ளனர்.

தனது முதல் திருமணம், குழந்தை என அனைத்தையும் ஒத்துக் கொண்ட ரோகினி அடுத்து மிகப்பெரிய பல்டி அடித்துள்ளார்.
அதாவது திருமணத்திற்கு முன்பே மனோஜிற்கு இந்த விஷயம் தெரியும் என்று கூறி விஜயா உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் கல்யாணி பேயாக வந்து நாடகம் போட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இவ்வாறு செய்துள்ளார். மனோஜ் படித்த முட்டாள் என்பதை நன்றாக அறிந்த ரோகினி அவரை இப்படி முட்டாள் ஆக்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |