Siragadikka Aasai: திருட்டுச் செயினால் மாட்டிக் கொண்ட விஜயா... ரோகினியை அடித்து நொறுக்கிய காட்சி
சிறகடிக்க ஆசை ரோகினி வாங்கிக் கொடுத்த செயின் திருட்டு செயின் என்பது விஜயாவிற்கு தெரியவந்த நிலையில் ரோகினியை அடித்து நொறுக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைத்துள்ளார். விஜயாவின் மனதை மாற்றுவதற்காக ரோகினி சமீபத்தில் சிட்டியிடமிருந்து ஒரு செயின் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார்.
குறித்த செயின் திருடியது என்பது விஜயாவிற்கு தெரியவரவே, பிறந்தநாள் நிகழ்வில் அசிங்கப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வந்து ரோகினியை விளாசி எடுத்துள்ளார்.
ரோகினி செய்துள்ள காரியத்தின் உண்மையை அறிந்த குடும்பத்தினர் பேரதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |