Siragadikka Aasai: சிட்டியிடம் ஏமாறும் ரோகினி... விஜயாவிடம் மீண்டும் சிக்குவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி சிட்டியிடமிருந்து குறைந்த விலைக்கு தங்க என்று நினைத்து கவரிங் செயினை வாங்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி விஜயாவிடம் பொய்கூறி மாட்டிக் கொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றார்.
மற்றொரு புறம் முத்துவை சிட்டியுடன் சேர்ந்து பழிவாங்கவும் செய்கின்றார். தற்போது மீண்டுமொரு சிக்கலில் ரோகினி மாட்டிக் கொள்கின்றார்.
ஆம் சிட்டியிடம் குறைந்த விலைக்கு நகை வாங்குவதாக ஏமாந்துள்ளார். இந்த செயினுக்கான பணத்தை தனது தோழி திவ்யாவிடமிருந்து வாங்கியுள்ளார்.
ஆனால் இதனை விஜயாவிடம் கொடுத்த பின்பு அவரிடம் மாட்டிக் கொள்வாரா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |