Siragadikka Aasai: காணாமல் போன ஸ்ருதி.... தேடி அழையும் முத்து மற்றும் மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி திருமண நாள் விழாவை வைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ரோகினியின் ரகசியத்தை கண்டுபிடிப்பதற்கு முத்து, அடுத்தடுத்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். போன் விடயத்தில் வித்யா மாட்டிக் கொண்ட நிலையில், இறுதியில் சாமர்த்தியமாக எஸ்கேப் ஆகியுள்ளார்.
தற்போது ஸ்ருதி மற்றும் ரவி இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தனது திருமண நாள் கொண்டாட்டத்தினைக் கொண்டாட மிகப்பெரிய ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆனால் ரவி ஹோட்டலில் தனது முதலாளி மகள் கீழே விழுந்ததால், அவரை தூக்கிக் கொண்டு வரும் வேளையில், ஸ்ருதி பார்த்துவிட்டார்.
இதனால் கோபித்துக் கொண்டு ஆட்டோவில் சென்றவர் மண்டபத்திற்கு இன்னும் வராமலேயே இருக்கின்றார். அவரை தேடி அழைத்து வருவதற்கு முத்து மீனா சென்றுள்ளனர்.
ஸ்ருதி தான் டப்பிங் பேசும் கம்பெனிக்கும் செல்லவில்லை. ஆதலால் எங்கு சென்றுள்ளார் என்று முத்து மற்றும் மீனா தேடி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |