Siragadikka Aasai: முத்துவை கைது செய்ய வந்த போலிசார்! மீண்டும் எழுந்த காதல்ஜோடி பிரச்சனை
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து காதல்ஜோடியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்ட நிலையில், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சிட்டி வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
விஜயாவின் நடனபள்ளிக்கு வந்த காதல் ஜோடிகளின் திருமணத்திற்கு முத்து சம்மதம் வாங்கி வந்த நிலையில், தற்போது அவர்கள் 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு தொந்தரவு செய்கின்றனர்.
இதற்கு காரணம் ரோகினி மனோஜிற்கு கொடுத்த ஐடியா தான் என்று அறிந்த விஜயா பயங்கர கோபத்தில் ரோகினியிடம் அந்த 10 லட்சத்தினை கொடுக்கக்கூறியுள்ளார்.
இந்நிலையில் முத்து மீண்டும் காதல்ஜோயின் குடும்பத்தினை சந்தித்து சமாதானம் பேசிய நிலையில், அங்கு கைகலப்பு எழுந்து சண்டை ஏற்பட்டுள்ளது.
பின்பு சின்ன சண்டையில் வெளியே வந்த நிலையில், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சிட்டி தனது அடியாட்களை அனுப்பி காதல்ஜோடி குடும்பத்தினரை அடிக்க வைத்துள்ளார்.
இதனால் போலிசார் முத்துவை கைது செய்வதற்கு அவரது வீட்டிற்கே வந்துள்ளனர். இதன் பின்பு முத்து இந்த பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |