Siragadikka Aasai: முத்துவிடம் சிக்கிய கடத்தல்காரர்... அருணிடம் உதவி கேட்ட தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷ் பிஏ-வால் கடத்தப்பட்டுள்ள நிலையில், முத்து பணத்துடன் க்ரிஷை மீட்க சென்றுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல சுவாரசியமான கதைகளங்களைக் கொண்டு செல்கின்றது. பெற்ற தாயே பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குகின்றார்.
வழக்கம் போன்று மாமியார் மருமகள் பிரச்சனையையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் மீனா முத்து இருவரும் அசால்டாக முடித்துவிடுகின்றனர்.

ரோகினி வாழ்க்கையில் நடந்த உண்மையை அறிந்த மீனா யாரிடமும் கூறமுடியாமல் தவித்து வருகின்றார். இந்நிலையில் க்ரிஷ் காணாமல் போயுள்ளார்.
குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்பு பிஏ கடத்திய விடயம் ரோகினிக்கு தெரியவந்துள்ளது. க்ரிஷை அழைத்துச் செல்ல வேண்டுமெனில் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.
உடனே முத்து விஜயாவின் பேச்சையும் மீறி க்ரிஷை மீட்க பணத்துடன் சென்றுள்ளார். அங்கு கடத்தல்காரரை பிடித்து அடிக்கும் போது அவர்கள் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
அந்த வழியாக வந்த அருணிடம் முத்து உதவி கேட்ட நிலையில், அவர் எதுவும் பேசாமல் இருக்கின்றார். அடுத்த நடக்கப்போவது என்ன என்பதை நாளைய தினம் தெரிந்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |