Siragadikka Aasai: ரவியைக் காதலிக்கிறேன் என பிடிவாதத்தில் நீத்து... மீண்டும் பிரியும் மற்றொரு ஜோடி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி, மனோஜ் ஜோடி விவாகரத்திற்கு நிற்கும் நிலையில், நீத்துவினால் ரவியின் வாழ்க்கையும் சிக்கலில் இருக்கின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள விவாகரத்து செய்வதற்கு விஜயா ஏற்பாடு செய்துள்ளார்.
இவர்களின் பிரச்சனை இன்னும் அடங்குவதற்குள் ரவி மற்றும் ஸ்ருதி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. நீத்து ரவியைக் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் நேரடியாக ரவியிடமும் காதலிப்பதாக கூறிய நிலையில், ஸ்ருதி மீனா இருவருக்கும் கோபம் எழுந்துள்ளது. இதனால் நீத்துவிடம் முத்து மீனா இருவரும் பேசுகையில் அவர் தனது முடிவிலிருந்து மாறாமல் இருக்கின்றார்.
மற்றொரு புறம் சிந்தாமணி தனது தந்திரத்தினால், விஜயாவிடம் வீட்டை எழுதி வாங்கியுள்ளார். இந்த பிரச்சனை எப்பொழுது பூதாகரமாக எழும் என்பது தெரியாமல் உள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |